வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் வெசாக் குளிர்பானப்பந்தல்.
வாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் சிறப்பு குளிர்பானப்பந்தல் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜரூள் அவர்களின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.சஞ்ஜீவ அவர்களின் தலைமையில் வெசாக் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் குளிர்பான பந்தல் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு குளிர்பானம் வினியோகிக்கப்பட்டது நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் இந்நிகழ்வு செய்யப்பட்டிருந்துடன், பகலுணவும் வழங்கி வைக்கப்பட்டது. சர்வமதத்தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை…
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு.
இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வானது திங்கள்கிழமை (25) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் தனது நன்றிகளையும் ஜனாதிபதி…
ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் இருள்சூழ்ந்த இடங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.
ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் இருள்சூழ்ந்த இடங்களை ஒளியூட்டும் வேலைத்திட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அடையாளப்படுத்தப்பட்ட மின்கம்பங்களுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் ஹாஜியார் அவர்களின் முயற்சியின் பலனாக ஏறாவூர் பற்று பிரதேசசபை ஊழியர்களினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.இதன்போது மிச்நகர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகளும் கலந்து கொண்டிருந்தனர் . இருள்சூழ்ந்த இடங்களுக்கு ஒளியூட்டியமைக்காக பிரதேச பொதுமக்கள் ஏறாவூர் பற்று பிரதேசசபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர்…
17வது தேசிய படையினர் தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.
கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள தேசிய படையினர் நினைவிடத்திற்கு முன்பாக இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். தமக்காக அன்றி, நாட்டிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்ததுடன், அவர்களை நமது இலங்கை மண்ணில் பெற்றெடுத்த அன்பிற்குரிய பெற்றோர்களுக்கும், குடும்பங்களின் அனைத்து உறவினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். சுதந்திரமான நாடும், அதேபோன்று அபிவிருத்தியடைந்த தேசமுமே அன்று…
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
நான்கு வீதிகளின் அபிவிருத்திப்பணிகள் ஆதம்பாவா எம்பியினால் ஆரம்பம் கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அப்கர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும் இலங்கை அரசியலமைப்புப்பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பங்கேற்புடனும் நடைபெற்றது. இதன்போது ரூபா 4 மில்லியன் செலவில்அட்டாளைச்சேனை வட்டானை வீதி, ரூபா 3 மில்லியன் செலவில்…
ராகமை ரணவிரு செவன பராமரிப்பு நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்.
ராகமையில் அமைந்துள்ள “ரணவிரு செவன” பராமரிப்பு நிலையத்திற்கு இன்று (19) முற்பகல் விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படையினரின் நலன்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பாதுகாப்பு படையினர் அனைவரும் செய்த அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து பாராட்டுக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் வைத்தியர்கள் உட்பட ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படையினர்களுக்காக மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் சேவை வசதிகள்…
ஏறாவூர் மிச்நகர் இல்மா பாடசாலை வளாகத்திற்கு மண் நிரப்பப்பட்டது.
ஏறாவூர் மிச்நகர் மட்/இல்மா வித்தியாலய சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாடசாலை வளாகத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு மண் போடும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH. சபூர்தீன் ஹாஜியார் அவர்களின் துரித முயற்சியின் ஊடாக சபையினால் பாடசாலைக்கு 25 லோட் மண் இன்று கொட்டப்பட்டு பிரதேச சபை JCB இயந்திர உதவியுடன் செப்பனிடும் பணிகளும் இடம்பெற்றன. இதன்போது ஐயங்கேணி வட்டார கௌரவ உறுப்பினர் MSM.ஜவ்பர்,மட்…
மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டம்.
மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (16) இன்று இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் “முழு நாடும் ஒன்றாக”…
பாடசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நளீர்.
(நூருல் ஹுதா உமர்) நாவிதன்வெளி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான பாட புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் தலைவருமான எம்.ஏ. நளீர் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலயம், சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயம் மற்றும் மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்…
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஐந்து முச்சக்கர வண்டிகள் வழங்கல்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஐந்து முச்சக்கர வண்டிகள் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.05.2026) வெள்ளிக்கிழமை காலை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எஸ். கரன் அவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும், மாவட்ட சமூக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தர் திரு சிவலிங்கம் (DSSO), பிரதேச…
